சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.042
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு பண் - சீகாமரம் (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CEEJM3UxekY |
6.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முடித் தாமரை அணிந்த மூர்த்தி பண் - திருத்தாண்டகம் (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.042  
அக்கு இருந்த ஆரமும், ஆடு
பண் - சீகாமரம் (திருத்தலம் திருஆக்கூர் ; (திருத்தலம் அருள்தரு கட்கநேத்திரவம்மை உடனுறை அருள்மிகு சுயம்புநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும், தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண் நீற்றான்; புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [1] |
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான், கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில் கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே. | [2] |
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில் வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [3] |
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப் பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான், பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [4] |
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண் ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை புடை தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [5] |
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான், கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில் விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம் தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே. | [6] |
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில் பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [7] |
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி, இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும் தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [8] |
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல் கோயில் இன்மையால் சென்று இரந்தார்க்கு, இல்லை என்னாது, ஈந்து உவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [9] |
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர், பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [10] |
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி, நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.021  
முடித் தாமரை அணிந்த மூர்த்தி
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருஆக்கூர் ; (திருத்தலம் அருள்தரு கட்கநேத்திராம்பிகை உடனுறை அருள்மிகு சுயம்புநாதவீசுவரர் திருவடிகள் போற்றி )
முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்; கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்; கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்; அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [1] |
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்; காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்; வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்; ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [2] |
மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி நீலகண்டம் உடையார் போலும்; நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும்; வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்; ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [3] |
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்; பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்; கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்; அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [4] |
ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும் மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்; மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும், ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [5] |
மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்; மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்; தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்; ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [6] |
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்; கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்; காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்; ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [7] |
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்; உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்; எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு ஏறிச் செல்லும் இறைவர் போலும்; அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [8] |
கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர் போது, தாது அணிந்த கண்ணி போலும்; நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்; படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்; அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [9] |
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும் புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்; கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்; வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே. | [10] |