சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) - நட்டபாடை அருள்தரு அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி உடனுறை அருள்மிகு கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=90vnAlHSZqM  
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.


[ 1]


மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,
குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.


[ 2]


மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.


[ 3]


பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.


[ 4]


மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்
கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.


[ 5]


Go to top
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,
கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.


[ 6]


மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை
நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.


[ 7]


முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,
குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.


[ 8]


அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை
குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.


[ 9]


மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்
குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.


[ 10]


Go to top
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,
ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
1.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானில் பொலிவு எய்தும் மழை
Tune - நட்டபாடை   (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song