சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சண்பைநகர் (சீர்காழி) - தக்கேசி அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk  
பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.


[ 1]


சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்
போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த
சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.


[ 2]


மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய
நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்
பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,
தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.


[ 3]


மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,
சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.


[ 4]


கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி
நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை
சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.


[ 5]


Go to top
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.


[ 6]


இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,
அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.


[ 7]


மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.


[ 8]


போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,
நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்
மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர்,
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.


[ 9]


வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,
சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.


[ 10]


Go to top
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சண்பைநகர் (சீர்காழி)
1.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பங்கம் ஏறு மதி சேர்
Tune - தக்கேசி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
3.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம் தமது சிந்தை பிரியாத
Tune - சாதாரி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song