சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=CEEJM3UxekY
2.042
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருஆக்கூர் - சீகாமரம் அருள்தரு கட்கநேத்திரவம்மை உடனுறை அருள்மிகு சுயம்புநாதேசுவரர் திருவடிகள் போற்றி
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 1]
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே
கோட்டகத்தில்
தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.
[ 2]
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன்
மடந்தை
தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில்
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 3]
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப்
பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான்,
பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 4]
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண்
தலை என்பு
ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண்
ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை
புடை
தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 5]
Go to top
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான்,
கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில்
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம்
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே.
[ 6]
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய
வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில்
பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 7]
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி,
இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்
கோயில்
பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும்
தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 8]
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல்
கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு, இல்லை என்னாது,
ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 9]
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர்,
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில்
சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை
தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
[ 10]
Go to top
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி,
நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஆக்கூர்
2.042
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு
Tune - சீகாமரம்
(திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
6.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முடித் தாமரை அணிந்த மூர்த்தி
Tune - திருத்தாண்டகம்
(திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400