சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) - சீகாமரம் அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=VWYHKdcEfME  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.


[ 1]


தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும்
இடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து,
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.


[ 2]


வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ,
ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும்
ஒழியாமே,
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே.


[ 3]


மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே.


[ 4]


கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக,
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.


[ 5]


Go to top
திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே,
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி
வந்தானைப்
புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே.


[ 6]


அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி,
பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து,
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே.


[ 7]


பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடிவாணாள் அது உடையானைப்
புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.


[ 8]


வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து
அவியச்
சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம்
ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.


[ 9]


கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும்
இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று,
இராமற்காப்
புடைத்து அவனைப் பொருது அழித்தான்
ள்ளிருக்குவேளூரே.


[ 10]


Go to top
செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து
ஆவான்,
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
2.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
Tune - சீகாமரம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
5.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள் எருக்கு அரவம் விரவும்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
6.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
Tune - திருத்தாண்டகம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song