சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=jIemSuLWelU
2.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவேணுபுரம் (சீர்காழி) - காந்தாரம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
[ 1]
சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம், தோல்
உடை ஆடை அது, கொண்டீர்! உமையாளை ஒருபாகம்
அடையாளம் அது கொண்டீர்! அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
[ 2]
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்!
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்!
மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த,
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
[ 3]
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து
உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே.
[ 4]
ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
[ 5]
Go to top
மணி மல்கு மால்வரை மேல் மாதினொடு மகிழ்ந்து
இருந்தீர்!
துணி மல்கு கோவணத்தீர்! சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்!
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச, வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.
[ 6]
நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்!
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.
[ 7]
திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென் இலங்கையர்
கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரை தன்னின்
கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின்
ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.
[ 8]
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசை முகன், மால்,
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற(அ)ரிய திருவடியீர்!
பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு,
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே.
[ 9]
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்
புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன்
அடியே
நிலை ஆகப் பேணி, நீ சரண்! என்றார் தமை, என்றும்
விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவேணுபுரம் (சீர்காழி)
1.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு ஆர் குழல் அரிவையொடு
Tune - நட்டபாடை
(திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.017
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நிலவும், புனலும், நிறை வாள்
Tune - இந்தளம்
(திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்
Tune - காந்தாரம்
(திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400