சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருதிலதைப்பதி (மதிமுத்தம்) - செவ்வழி அருள்தரு பொற்கொடியம்மை உடனுறை அருள்மிகு மதிமுத்தநாதேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=URtSxOhf1SQ  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.


[ 1]


தொண்டர் மிண்டி, புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு, கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன்(ன்) இடம்
தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
வண்டு கெண்டு உற்று இசை பயிலும் சோலை(ம்)
மதிமுத்தமே.


[ 2]


அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர்
தொழக்
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம்
திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி,
மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே.


[ 3]


கங்கை, திங்கள், வன்னி, துன் எருக்கி(ன்)னொடு, கூவிளம்,
வெங் கண் நாகம், விரிசடையில் வைத்த விகிர்தன்(ன்)
இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே.


[ 4]


புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித்தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள்,
மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே.


[ 5]


Go to top
விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான்,
இடம்
தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி,
மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே.


[ 6]


ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி,
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே.


[ 7]


கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை
எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய,
வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே.


[ 8]


படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின்
மிசை
இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும்
திலைதைப்பதி,
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.


[ 9]


புத்தர் தேரர், பொறி இல் சமணர்களும், வீறு இலாப்
பித்தர் சொன்ன(ம்) மொழி கேட்கிலாத பெருமான் இடம்
பத்தர், சித்தர், பணிவு உற்று இறைஞ்சும் திலதைப்பதி,
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.


[ 10]


Go to top
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.

[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருதிலதைப்பதி (மதிமுத்தம்)
2.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,
Tune - செவ்வழி   (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song