சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) - செவ்வழி அருள்தரு தோகையம்பிகையம்மை உடனுறை அருள்மிகு தோன்றாத்துணையீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=zMRLOLL1RUI  
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே


[ 1]


கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே,
முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம்,
புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே


[ 2]


மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர், மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப் புலியூர் உளான்,
வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து, வெறி செய்த
பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும்(ம்) அழகு ஆகவே.


[ 3]


போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள்
ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை
ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே?


[ 4]


ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல் ஐந்தலை
நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள்,
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.


[ 5]


Go to top
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்) மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள்
குதியும் கொள்வர்; விதியும் செய்வர், குழகு ஆகவே.


[ 6]


கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்வாய்ச்
சங்கு அரவப் பறையின்(ன்) ஒலி அவை சார்ந்து எழ,
பொங்கு அரவம்(ம்) உயர் பாதிரிப்புலியூர் தனுள்
அங்கு அரவம்(ம்) அரையில்(ல்) அசைத்தானை அடைமினே!


[ 7]


வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்) இடை
ஊக்கம் ஒழிந்து அலற(வ்) விரல் இறை ஊன்றினான்,
பூக் கமழும் புனல், பாதிரிப்புலியூர் தனை
நோக்க, மெலிந்து அணுகா, வினை, நுணுகுங்களே


[ 8]


அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன்,
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.


[ 9]


உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத்
திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும்,
எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே!


[ 10]


Go to top
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
2.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னம் நின்ற முடக்கால் முயற்கு
Tune - செவ்வழி   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song