சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஓமாம்புலியூர் - புறநீர்மை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=7Fgqyypgt5U  
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.


[ 1]


சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார், இமையவர் ஏத்த, இனிதின் அங்கு உறைவு இடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.


[ 2]


பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக்
கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த தத்துவன் உறைவு இடம் வினவில்
ஆங்கு எரிமூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால்
ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.


[ 3]


புற்று அரவு அணிந்து, நீறு மெய் பூசி, பூதங்கள் சூழ்தர, ஊர் ஊர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன்
உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார்
அருத்தியால்-தெரியும்
உற்ற பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.


[ 4]


நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர் கெட, நெடிய
மாற்கு அருளால்,
அலைத்த வல் அசுரர் ஆசு அற, ஆழி அளித்தவன் உறைவு இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார், நன்மையால் மிக்க
உலப்பு இல் பல்புகழார், ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.


[ 5]


Go to top
மணம் திகழ் திசைகள் எட்டும், ஏழ் இசையும், மலியும் ஆறு
அங்கம், ஐவேள்வி,
இணைந்த நால்வேதம், மூன்றுஎரி, இரண்டுபிறப்பு, என
ஒருமையால் உணரும்
குணங்களும், அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று
அவை உற்றதும், எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.


[ 6]


தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை
அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
அதுவே.


[ 8]


கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன், என்று இவர்
காண்பு அரிது ஆய
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவு இடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி, பனிமலர்ச்சோலை சூழ் ஆலை,
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.


[ 9]


தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளம் ஆர் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார்
உறைவு இடம் வினவில்
நள் இருள் யாமம் நால்மறை தெரிந்து, நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.


[ 10]


Go to top
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள்
மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை,
களி தரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுள் ஞானசம்பந்தன்,
அளிதரு பாடல்பத்தும் வல்லார்கள், அமரலோகத்து இருப்பாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஓமாம்புலியூர்
3.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்
Tune - புறநீர்மை   (திருஓமாம்புலியூர் )
6.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர் ஆரும் மூ இலை
Tune - திருத்தாண்டகம்   (திருஓமாம்புலியூர் துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song