சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=3IFBeKSX1B0
4.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்கழிப்பாலை - காந்தாரம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி
வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் தானவனே! என்கின்றாளால்;
சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;
அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!
[ 1]
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே! என்கின்றாளால்;
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்;
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 2]
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது என்கின்றாளால்;
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- மணி சேர் மிடற்றவனே! என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 3]
இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்-
சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன் என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 4]
பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன் என்கின்றாளால்;
விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே! என்கின்றாளால்;
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே! என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 5]
Go to top
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே! என்கின்றாளால்;
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே! என்கின்றாளால்;
பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே! என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
[ 6]
முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம் என்கின்றாளால்;
அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம் என்கின்றாளால்;
சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 7]
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்;
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே! என்கின்றாளால்;
பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 8]
வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே! என்கின்றாளால்;
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான் என்கின்றாளால்;
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 9]
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே! என்கின்றாளால்;
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான் என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கழிப்பாலை
2.021
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
Tune - இந்தளம்
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
3.044
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
Tune - கௌசிகம்
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
Tune - காந்தாரம்
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
Tune - திருநேரிசை
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெய்தல் குருகு தன் பிள்ளை
Tune - திருவிருத்தம்
(திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
Tune - திருத்தாண்டகம்
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
7.023
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
Tune - நட்டராகம்
(திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400