சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=s9ODsmIO0K0
4.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்கயிலாயம் - திருநேரிசை அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி
கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 1]
கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்;
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 2]
கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு,
நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்;
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 3]
கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு,
நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்;
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 4]
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை,
நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்;
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 5]
Go to top
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 6]
கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 7]
கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச்
செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்;
வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 8]
கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 9]
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாள வரி கோள புலி
Tune - சாதாரி
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்
(திருக்கயிலாயம் )
11.008
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
திருக்கயிலாய ஞான உலா
Tune -
(திருக்கயிலாயம் )
11.009
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -
(திருக்கயிலாயம் )
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400