சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=fkS7G-zK1CU
4.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவண்ணாமலை - திருநேரிசை அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.
[ 1]
பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல-
கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா!
அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.
[ 2]
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே!
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.
[ 3]
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
[ 4]
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா!
மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா!
அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே!
இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
[ 5]
Go to top
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக்
கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா!
அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.
[ 6]
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும்,
உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்!
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே!
பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே.
[ 7]
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.
[ 8]
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே!
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்!
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே!
வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.
[ 9]
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்!
உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே!
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே!
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவண்ணாமலை
1.010
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
1.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.063
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
Tune - திருநேரிசை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
Tune - திருக்குறுந்தொகை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
8.107
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune -
(திருவண்ணாமலை )
8.108
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune -
(திருவண்ணாமலை )
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400