சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.110   திருநாவுக்கரசர்   தேவாரம்

பசுபதித் திருவிருத்தம் - கொல்லி அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=xlQGcinuoIc  
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி,
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 1]


உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 2]


தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரித் திரைப் பௌவம் நீக்குகண்டாய்-முன்னை நாள் ஒரு கால்
வேரித் தண் பூஞ் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழச் செந்தீப்
பாரித்த கண் உடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 3]


ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 4]


இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும்
சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி,
படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 5]


Go to top
அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள்,
சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து
படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!


[ 6]


துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவித்தொழில் அது மாற்றுகண்டாய்-மதில் மூன்று உடைய
அறவைத்தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்-
பறவைப்புரம் எரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 7]


சித்தத்து உருகி, சிவன், எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்-
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!


[ 8]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பசுபதித் திருவிருத்தம்
4.110   திருநாவுக்கரசர்   தேவாரம்   சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,
Tune - கொல்லி   (பசுபதித் திருவிருத்தம் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song