சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=qb5LycwPo54
5.008
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருஅன்னியூர் (பொன்னூர்) - திருக்குறுந்தொகை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
அன்னியூர் என்று தேவாரப் பதிகங்களில் அழைக்கப்பட்ட இந்த தலம், இந்நாளில் அன்னூர் என்றும் பொன்னூர் என்றும் அழைக்கப்படுகின்றது. மயிலாடுதுறை மணல்மேடு பாதையில், மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். அப்பர் பிரான் அன்னியூர் சென்றதாக பெரிய புராண குறிப்பு ஏதும் இல்லை. அப்பர் பிரான் கயிலாயம் தவிர்த்த மற்ற அனைத்து தலங்களின் மீது அருளிய பதிகங்களை, அந்தந்த தலங்களுக்கு சென்று பாடினார் என்பதாலும், இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் கிடைத்திருப்பதால், அவர் அருகில் உள்ள பந்தணைநல்லூர் முதலிய தலங்களுக்கு சென்ற போது இங்கும் சென்றிருக்க வேண்டும்
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.
[ 1]
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்;
அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.
[ 2]
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்,
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.
[ 3]
வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்;
சோதி வெண்பிறை துன்று சடைக்கு அணி
நாதர்; நீதியினால் அடியார் தமக்கு
ஆதி ஆகி நின்றார்-அன்னியூரரே.
[ 4]
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்;
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.
[ 5]
Go to top
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்;
கந்தமாமலர் சூடும் கருத்தினர்;
சிந்தை ஆர் சிவனார்; செய்யதீவண்ணர்;
அந்தணாளர் கண்டீர்-அன்னியூரரே.
[ 6]
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்-
வானை; வானவர்தாங்கள் வணங்கவே,
தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா,
ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.
[ 7]
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி;
மேலைவானவர் வந்து விரும்பிய,
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே,
ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.
[ 8]
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த்
திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்;
கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு
அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.
[ 9]
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்-
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஅன்னியூர் (பொன்னூர்)
1.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மன்னி ஊர் இறை; சென்னியார்,
Tune - குறிஞ்சி
(திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.008
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400