சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாரூர் - திருத்தாண்டகம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=y6Gz9xn36Vk  
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்;
வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்;
வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்-
செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 1]


அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும் ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்;
கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை, குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித்
தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும் தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும்,
திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 2]


நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்;
வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்;
வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்;
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்; கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்-
சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே.


[ 3]


கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்; கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்;
ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்; உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்;
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல் தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்-
தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு   மூலட்டானத்து எம் செல்வன்தானே.


[ 4]


பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்; பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்;
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்; வானவரும் அறியாத நெறி தந்தான் காண்-
நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே.


[ 5]


Go to top
சங்கரன்காண்; சக்கரம் மாற்கு அருள் செய்தான்காண்; தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்;
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன்காண்; அணி பொழில் சூழ் ஐயாற்றான்காண்;
எங்கள் பெருமான்காண்; என் இடர்கள் போக அருள் செய்யும் இறைவன்காண்- இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 6]


நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்;
நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்;
மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்; வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்;
துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்; சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 7]


பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்;   புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்;
மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்; வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்;
கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்; கோலமா நீறு அணிந்த மேனியான்காண்-
செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 8]


விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான்காண்; வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான்காண்;
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான்காண்; வாய் மூரும் மறைக்காடும், மருவினான் காண்;
புண்டரிகக் கண்ணானும், பூவின்மேலைப் புத்தேளும், காண்பு அரிய புராணன் தான்காண்-
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 9]


செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்; தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ,
மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்; வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்;
அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும், ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு
ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்
1.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
1.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
2.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.101   திருநாவுக்கரசர்   தேவாரம்   குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.102   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாதித் தன் திரு உருவில்
Tune -   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற  
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
7.008   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.012   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்   (திருவாரூர் )
7.033   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி   (திருவாரூர் )
7.037   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
7.047   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் )
7.051   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
8.139   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -   (திருவாரூர் )
11.007   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை   திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவாரூர் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song