சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=3EHC8lAB16w
7.006
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருவெண்காடு - இந்தளம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 1]
இழித்து உகந்தீர், முன்னை வேடம்; இமையவர்க்கும் உரைகள் பேணாது,
ஒழித்து உகந்தீர்; நீர் முன் கொண்ட உயர் தவத்தை, அமரர் வேண்ட,
அழிக்க வந்த காமவேளை, அவனுடைய தாதை காண,
விழித்து உகந்த வெற்றி என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 2]
படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம் போற்ற, மாதும் நீரும்,
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர்; உண்மை அன்றே!
சடைகள் தாழக் கரணம் இட்டு, தன்மை பேசி, இல் பலிக்கு
விடை அது ஏறி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 3]
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்;
கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த,
விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 4]
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய,
நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி, நல்குவீர்; நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார் கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே!.
[ 5]
Go to top
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப்
பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி,
வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 6]
காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே,
பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்;
நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ,
வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 7]
குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம்,
விரவுகின்ற சடை உடையீர்; விருத்தர் ஆனீர்; கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்; பாகம் ஆய மங்கை அஞ்சி
வெருவ, வேழம் செற்றது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 8]
மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்?
நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
[ 9]
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்-
அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவெண்காடு
2.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் காட்டும் நுதலானும், கனல்
Tune - சீகாமரம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
Tune - காந்தாரம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
5.049
திருநாவுக்கரசர்
தேவாரம்
பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
தூண்டு சுடர் மேனித் தூநீறு
Tune - திருத்தாண்டகம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.006
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படம் கொள் நாகம் சென்னி
Tune - இந்தளம்
(திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400