சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.022   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்பழமண்ணிப்படிக்கரை - நட்டராகம் அருள்தரு வடிக்கண்ணமுதகரநாயகியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=1nr1Tdgfwpc  
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,
சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான்,
மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .


[ 1]


அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல
தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்;
வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய
பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .


[ 2]


ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு
சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து,
வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று,
பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .


[ 3]


அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ எயிலும்
கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்-
படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .


[ 4]


உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்!
மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான்,
அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய
பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .


[ 5]


Go to top
செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர்
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்;
கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்-
படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .


[ 6]


கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை
எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற,
விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப்
படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே.


[ 7]


திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்;
அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல
கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய
பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .


[ 8]


வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும்
துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்!
பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள்
பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! .


[ 9]


பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை
அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும்,
எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழமண்ணிப்படிக்கரை
7.022   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முன்னவன், எங்கள் பிரான், முதல்
Tune - நட்டராகம்   (திருப்பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song