சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.026   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்காளத்தி - நட்டராகம் அருள்தரு ஞானப்பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=vU7izHQuO6s  
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே!
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே!
கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!
அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .


[ 1]


இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே!
கமை ஆர் கருணையினாய்! கரு மா முகில் போல் மிடற்றாய்!
உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள்
அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.


[ 2]


படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே!
விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்!
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்!
உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே.


[ 3]


மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே!
குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்;
நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .


[ 4]


செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி,
நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால்,
துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்!
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.


[ 5]


Go to top
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்;
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே!
மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என்
ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .


[ 6]


கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள்
குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா!
முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்!
அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே .


[ 7]


நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக்
கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே!
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்!
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! .


[ 8]


தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி,
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்!
களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த
ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே .


[ 9]


கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்காளத்தி
3.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
Tune - கொல்லி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
3.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
Tune - சாதாரி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
6.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   விற்று ஊண் ஒன்று இல்லாத
Tune - திருத்தாண்டகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
7.026   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
Tune - நட்டராகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song