சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=hftdKQrF0JI
7.053
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருக்கடவூர் மயானம் - பழம்பஞ்சுரம் அருள்தரு மலர்க்குழல்மின்னம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரீசுவரர் திருவடிகள் போற்றி
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல
வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ;
திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும்,
பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 1]
விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்;
கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்;
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம்,
பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 2]
காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்;
தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்;
பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 3]
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த
இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்;
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்
பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 4]
கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண் ஆக,
மத்த யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்;
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 5]
Go to top
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து,
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த்
திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்;
பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 6]
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்;
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்;
ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்;
பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 7]
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க்
கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து,
நாடா வண்ணம் செருச் செய்து, ஆவ நாழி நிலை அருள் செய்
பீடு ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 8]
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்;
ஆழி அளிப்பர், அரிதனக்கு; ஆன் அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்;
ஏழைத் தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு மான்மறிக் கையர்;
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
[ 9]
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து,
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள்
பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கடவூர் மயானம்
2.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரிய மறையார், பிறையார், மலை
Tune - காந்தாரம்
(திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
5.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழை கொள் காதினர், கோவண
Tune - திருக்குறுந்தொகை
(திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
7.053
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மரு ஆர் கொன்றை மதி
Tune - பழம்பஞ்சுரம்
(திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400