சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.097   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநனிப்பள்ளி - பஞ்சமம் அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=FnmKA0tsFmA  
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்
நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 1]


உறவு இலி; ஊனம் இலி; உணரார் புரம் மூன்று எரியச்
செறி வி(ல்)லி; தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய
அற இலகும்(ம்) அருளான்; மருள் ஆர் பொழில், வண்டு அறையும்,
நற விரி கொன்றையினான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 2]


வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்;
ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு
ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்;
நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 3]


ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்-
பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக்
காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ்
நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 4]


பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக்
கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து,
நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 5]


Go to top
மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,-
புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன்,
மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே.


[ 6]


அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும்,
எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்;
பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்;
செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.


[ 7]


திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய்,
நம் கண் பிணி களைவான்; அரு மா மருந்து, ஏழ் பிறப்பும்;
மங்கத் திருவிரலால் அடர்த்தான், வல் அரக்கனையும்;
நங்கட்கு அருளும் பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 8]


ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு, உகந்து,
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்;
ஊனம் இல் காழி தன்னுள்(ள்) உயர் ஞானசம்பந்தற்கு அன்று
ஞானம் அருள்புரிந்தான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.


[ 9]


காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி,
கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில்
சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநனிப்பள்ளி
2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காரைகள், கூகை, முல்லை, கள,
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
4.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்
Tune - திருநேரிசை   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
7.097   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்
Tune - பஞ்சமம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song