வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- இடர்-ஆழி நீங்குகவே என்று
|
[2082.0] |
முதலியாண்டான்அருளிச்செய்தது கைதைசேர்பூம்பொழில்சூழ்கச்சிநகர்வந்துதித்த பொய்கைப்பிரான்கவிஞர்போரேறு - வையத்து அடியவர்வாழஅருந்தமிழந்தாதி படிவிளங்கச்செய்தான்பரிந்து.
|
[2082.1] |
என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது- அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
|
[2083.0] |
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்- நீ அளவு கண்ட நெறி
|
[2084.0] |
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்- ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த ஆலம் அமர் கண்டத்து அரன்
|
[2085.0] |
Back to Top |
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஒன்று
|
[2086.0] |
ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்- திருவரங்கம் மேயான் திசை
|
[2087.0] |
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க் கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத வண்ணன் படைத்த மயக்கு
|
[2088.0] |
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!- போர் ஆழிக் கையால் பொருது?
|
[2089.0] |
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன ்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க மா வடிவின் நீ அளந்த மண்
|
[2090.0] |
Back to Top |
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் உலகு அளவும் உண்டோ உன் வாய்?
|
[2091.0] |
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்- காணா கண் கேளா செவி
|
[2092.0] |
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே- ஏனமாய் நின்றாற்கு இயல்வு
|
[2093.0] |
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக நீதியால் ஓதி நியமங்களால் பரவ ஆதியாய் நின்றார் அவர்
|
[2094.0] |
அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த மூர்த்தி உருவே முதல்
|
[2095.0] |
Back to Top |
முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும் முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது
|
[2096.0] |
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்- கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண் அடல் ஓத வண்ணர் அடி
|
[2097.0] |
அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள் ஊர்ந்தான் உலகு அளந்த நான்று
|
[2098.0] |
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்- மருது இடை போய் மண் அளந்த மால்
|
[2099.0] |
மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக் கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப்பெற்று?
|
[2100.0] |
Back to Top |