| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=0EPWtzYuzW0 https://www.youtube.com/watch?v=QMgykSuuVcE Add audio link
4.065
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருச்சாய்க்காடு (சாயாவனம்) - திருநேரிசை அருள்தரு குயிலின்நன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயவனேசுவரர் திருவடிகள் போற்றி
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப் பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.
1
வடங்கெழு மலைமத் தாக வானவ ரசுர ரோடு
கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவ ரஞ்சி
அடைந்துநுஞ் சரண மென்ன வருள்பெரி துடைய ராகித்
தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவி னாரே.
2
அரணிலா வெளிய நாவ லருநிழ லாக வீசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்
தரணிதா னாள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே.
3
அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி யொள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி யீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
4
இந்திரன் பிரம னங்கி யெண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.
5
Go to top
ஆமலி பாலு நெய்யு மாட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
6
மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையி லேற்றார் சாய்க்காடு மேவி னாரே.
7
குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் கலச மாட்ட
உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.
8
நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்க ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.
9
புயங்கமைஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச்
சிவன்றிரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற வெய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்சாய்க்காடு (சாயாவனம்)
2.038
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
Tune - இந்தளம்
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.041
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண் புகார், வான்புகுவர்; மனம்
Tune - சீகாமரம்
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
4.065
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோடு உலாம் மலர்கள் தூவித்
Tune - திருநேரிசை
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
6.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
Tune - திருத்தாண்டகம்
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000