சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.058
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரியும், நம் வினை உள்ளன பண் - பழந்தக்கராகம் (திருக்கரவீரம் கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wuzO5Hh_CQU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.058  
அரியும், நம் வினை உள்ளன
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருக்கரவீரம் ; (திருத்தலம் அருள்தரு பிரத்தியட்சமின்னாளம்மை உடனுறை அருள்மிகு கரவீரேசுவரர் திருவடிகள் போற்றி )
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன், திகழும் கரவீரத்து எம் பெரியவன், கழல் பேணவே. | [1] |
தங்குமோ, வினை தாழ்சடை மேலவன், திங்களோடு உடன்சூடிய கங்கையான், திகழும் கரவீரத்து எம் சங்கரன், கழல் சாரவே? | [2] |
ஏதம் வந்து அடையா, இனி நல்லன பூதம் பல்படை ஆக்கிய காதலான், திகழும் கரவீரத்து எம் நாதன், பாதம் நணுகவே. | [3] |
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட மறையும் மாமணி போல் கண்டம் கறையவன், திகழும் கரவீரத்து எம் இறையவன், கழல் ஏத்தவே. | [4] |
பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன், விண்ணின் ஆர் மதில் எய்த முக் கண்ணினான், உறையும் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே. | [5] |
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை அழலினார், அனல் ஏந்திய கழலினார், உறையும் கரவீரத்தைத் தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே. | [6] |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன், அண்டன், ஆர் அழல் போல் ஒளிர் கண்டனார் உறையும் கரவீரத்துத் தொண்டர்மேல் துயர் தூரமே. | [7] |
புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச் சின வல் ஆண்மை செகுத்தவன், கனலவன், உறைகின்ற கரவீரம் என வல்லார்க்கு இடர் இல்லையே. | [8] |
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த் தெள்ள, தீத்திரள் ஆகிய கள்ளத்தான் உறையும் கரவீரத்தை உள்ளத் தான் வினை ஓயுமே. | [9] |
செடி அமணொடு சீவரத்தார் அவர் கொடிய வெவ் உரை கொள்ளேன் மின்! கடியவன் உறைகின்ற கரவீரத்து அடியவர்க்கு இல்லை, அல்லலே. | [10] |
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம் சேடன் மேல் கசிவால்-தமிழ் நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை பாடுவார்க்கு இல்லை, பாவமே. | [11] |