சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.046
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை பண் - கௌசிகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uSnIymbkLcs |
6.015
திருநாவுக்கரசர்
தேவாரம்
குருகு ஆம்; வயிரம் ஆம்; பண் - திருத்தாண்டகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pAmABtxi5nA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருத்தலம் திருக்கருகாவூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குழத்தைப் பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம்
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே, மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [1] |
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம், கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர் அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே. | [2] |
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக் குழகர்! என்று குழையா, அழையா, வரும், கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [3] |
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து உடன், செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [4] |
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட, செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம் ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [5] |
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட, ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்; காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. | [6] |
வெந்த நீறு மெய் பூசிய வேதியன், சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்- கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. | [7] |
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும் கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [9] |
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல் தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்! கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம் ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [10] |
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல் உடையான் தன நீள்கழல் குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.015  
குருகு ஆம்; வயிரம் ஆம்;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருக்கருகாவூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்; பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்; ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்; கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [1] |
வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்; வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்; பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்; தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [2] |
பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்; பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி, ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [3] |
இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண் திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்; அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்; ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும் குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [4] |
படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்; உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்) அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம் அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்; கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [5] |
மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்; மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்; சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்; மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம் காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [6] |
அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்; ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர் திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை நாசன், என் சிந்தையான் ஆம்; உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்; உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக் கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [7] |
துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்; சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்; படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால் நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்; கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே. | [8] |
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்; விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்; பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்; எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்; என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்; கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [9] |
பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள் இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய், செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்; அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி; கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [10] |
ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி; உடனே வைத்து(வ்) இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்; இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்; அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்; கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. | [11] |