சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.016
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நிணம் படு சுடலையில், நீறு பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளிக்காடு அக்கினீசுவரர் பஞ்சினுமெல்லடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yn9XSEdQ1fw |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.016  
நிணம் படு சுடலையில், நீறு
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருக்கொள்ளிக்காடு ; (திருத்தலம் அருள்தரு பஞ்சினுமெல்லடியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று, இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்; உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும், குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே. | [1] |
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான், சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே. | [2] |
அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம் வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே; மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல் கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே. | [3] |
பா வணம் மேவு சொல்மாலையின், பல நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்; ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும், கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே. | [4] |
வார் அணி வனமுலை மங்கையாளொடும் சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்; நார் அணி சிலைதனால் நணுகலார் எயில் கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே. | [5] |
பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும் மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்; வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே. | [6] |
இறை உறு வரி வளை இசைகள் பாடிட, அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்; சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக் குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே. | [7] |
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால், அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப் படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும், கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே. | [8] |
தேடினார், அயன் முடி, மாலும் சேவடி; நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்; பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும் கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே. | [9] |
நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள், சாக்கியர் ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல; பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும் கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே. | [10] |
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன், குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச் சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக் கற்றவர், கழல் அடி காண வல்லரே. | [11] |