சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.058
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் பண் - பஞ்சமம் (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1ztXzW4RmGk |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.058  
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருச்சாத்தமங்கை ; (திருத்தலம் அருள்தரு மலர்க்கணம்பிகையம்மை உடனுறை அருள்மிகு அயவந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே? பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே! | [1] |
பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த, கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே? கடி-மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே! | [2] |
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து, ஏறு அது ஏறி, மான் அன நோக்கி தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே? தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை ஆன் நலம் தோய்ந்த எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே! | [3] |
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி, புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே? கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம் அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே! | [4] |
வெந்த வெண் நீறு பூசி, விடை ஏறிய வேத கீதன், பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே? சந்தம் ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை, அந்தம் ஆம் ஆதி ஆகி, அயவந்தி அமர்ந்தவனே! | [5] |
வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது ஆகி, சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே? சாதியால் மிக்க சீரால்-தகுவார் தொழும் சாத்தமங்கை ஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே! | [6] |
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி, உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே? சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை, அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே! | [7] |
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி, விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே? தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே! | [8] |
பேர் எழில்-தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம் ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே? கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணா ஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே! | [9] |
கங்கை ஓர் வார்சடைமேல் அடைய, புடையே கமழும் மங்கையோடு ஒன்றி நின்ற(ம்) மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே? சங்கை இல்லா மறையோர் அவர்தாம் தொழு சாத்தமங்கை, அங்கையில் சென்னி வைத்தாய்! அயவந்தி அமர்ந்தவனே! | [10] |
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும் நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும், முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே. | [11] |