சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.025
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மரு ஆர் குழலிமாது ஓர் பண் - தக்கராகம் (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4owEV1ZD9TU |
4.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு பண் - திருநேரிசை (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=qqYwyD7H4to Audio: https://www.youtube.com/watch?v=kAw-cHbeOLs |
5.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
கான் அறாத கடி பொழில் பண் - திருக்குறுந்தொகை (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=I1IbDrUL2rE |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.025  
மரு ஆர் குழலிமாது ஓர்
பண் - தக்கராகம் (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு சுகந்தவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு சொர்னபுரீசர் திருவடிகள் போற்றி )
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய், திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை மருவாதவர் மேல் மன்னும், பாவமே. | [1] |
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய், சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச் சேராதவர் மேல் சேரும், வினைகளே. | [2] |
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித் திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய, நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே. | [3] |
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய், செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே. | [4] |
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல், நிலையா வணங்க, நில்லா, வினைகளே. | [5] |
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச் சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை நிறையால் வணங்க, நில்லா, வினைகளே. | [6] |
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும் செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை மெய்யால் வணங்க, மேவா, வினைகளே. | [7] |
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து, தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை ஆனான் கழலே அடைந்து வாழ்மினே! | [8] |
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும், தேரார் செம்பொன் பள்ளி மேவிய, நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே. | [9] |
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும், பேசா வண்ணம் பேசித் திரியவே, தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய ஈசா! என்ன, நில்லா, இடர்களே. | [10] |
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப் பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும் உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.029  
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
பண் - திருநேரிசை (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி, வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்; நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள் தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே | [1] |
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும் மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில் நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச் செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [2] |
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும் தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [3] |
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி; முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி, எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச் சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [4] |
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்; கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்; நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச் சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே. | [5] |
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர் காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர் கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில் சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே. | [6] |
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்; எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்; தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே. | [7] |
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும் நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச் சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [8] |
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும் பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை; தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே. | [9] |
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும், செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.036  
கான் அறாத கடி பொழில்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருச்செம்பொன்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான், ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி- தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே! | [1] |
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச் செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே. | [2] |
வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண் அலர்; கீறு கோவண ஐ துகில் ஆடையர்; தேறல் ஆவது ஒன்று அன்று, செம்பொன்பள்ளி ஆறு சூடிய அண்ணல் அவனையே. | [3] |
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து இருவராய், இடுவார் கடை தேடுவார், தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்; ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே! | [4] |
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான், ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்- தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்; மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே. | [5] |
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக் கலவர் ஆவதன் காரணம் என்கொலோ- திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார், குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.? | [6] |
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர், மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர் செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே. | [7] |
வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்; அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே. | [8] |
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர் நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச் சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான், நின்ற சூழலில் நீள் எரி ஆகியே. | [9] |
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால் எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்; அரிய வானம் அவர் அருள்செய்வரே. | [10] |