சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருச்சேஞலூர் ; (திருத்தலம் அருள்தரு சகிதேவிநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தகிரீசுவரர் திருவடிகள் போற்றி )
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை, ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே? | [1] |
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால் கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல் ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே? | [2] |
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து, கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே, மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [3] |
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின் நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர் சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [4] |
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய், வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித் தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே? | [5] |
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து, வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய் சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே? | [6] |
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத் தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே? | [7] |
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன் நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே? | [8] |
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும், பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார், சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே? | [9] |
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய், தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே? | [10] |
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி, தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்- சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள் வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே. | [11] |