சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.098
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தண் இயல் வெம்மையினான்; தலையில் பண் - பஞ்சமம் (திருநன்னிலத்துப்பெருங்கோயில் ) Audio: https://www.youtube.com/watch?v=LhGswCFTYDk Audio: https://www.youtube.com/watch?v=pa-SoygOe9U |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.098  
தண் இயல் வெம்மையினான்; தலையில்
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருநன்னிலத்துப்பெருங்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி, பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன் புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [1] |
வலம் கிளர் மாதவம் செய் மலை மங்கை ஓர் பங்கினனாய், சலம் கிளர் கங்கை தங்கச் சடை ஒன்று இடையே தரித்தான் பலம் கிளர் பைம்பொழில்-தண்பனி வெண்மதியைத் தடவ, நலம் கிளர்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [2] |
கச்சியன்; இன் கருப்பூர் விருப்பன்; கருதிக் கசிவார் உச்சியன்; பிச்சை உண்ணி(ய்); உலகங்கள் எல்லாம் உடையான் நொச்சி அம் பச்சிலையால், நுரைநீர்-புனலால்,-தொழுவார் நச்சிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [3] |
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா ஆடிய மா நடத்தான் அடி போற்றி! என்று அன்பினராய்ச் சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [4] |
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய சலந்தரன் ஆகும் இருபிளவு ஆக்கிய, சக்கரம் முன் நிலம் தரு மாமகள்கோன் நெடுமாற்கு அருள்செய்த பிரான் நலம் தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே | [5] |
வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான், பெண் படி செஞ்சடையான், பிரமன் சிரம் பீடு அழித்தான் பண்பு உடை நல்மறையோர் பயின்று ஏத்தி, பல்கால் வணங்கும் நண்பு உடை-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [6] |
தொடை மலி கொன்றை துன்றும் சடையன், சுடர் வெண்மழுவாள் படை மலி கையன், மெய்யில் பகட்டு ஈர் உரிப்போர்வையினான் மடை மலி வண்கமலம் மலர்மேல் மட அன்னம் மன்னி நடை மலி-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [7] |
குளிர்தரு திங்கள், கங்கை, குரவோடு, அர, கூவிளமும், மிளிர்தரு புன்சடைமேல் உடையான், விடையான் விரை சேர் தளிர் தரு கோங்கு, வேங்கை, தட மாதவி, சண்பகமும், நளிர்தரு-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [8] |
கமர் பயில் வெஞ்சுரத்துக் கடுங் கேழல் பின் கானவனாய், அமர் பயில்வு எய்தி, அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான் தமர் பயில் தண் விழவில்-தகு சைவர், தவத்தின் மிக்க நமர், பயில்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [9] |
கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற, ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான் திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன், நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. | [10] |
கோடு உயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய் கோயில், நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச் சேடு இயல் சிங்கிதந்தை-சடையன், திரு ஆரூரன் பாடிய பத்தும் வல்லார் புகுவார், பரலோகத்துளே. | [11] |