சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.072
திருநாவுக்கரசர்
தேவாரம்
வைத்த மாடும், மனைவியும், மக்கள், பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருநீலக்குடி ; (திருத்தலம் அருள்தரு நீலநிறவுமையம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர் செத்தபோது, செறியார் பிரிவதே; நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே. | [1] |
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்- நெய் அது ஆடிய நீலக்குடி அரன், மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம் கையில் ஆமலகக்கனி ஒக்குமே. | [2] |
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய நீற்றன் நீலக்குடி உடையான்; அடி போற்றினார் இடர் போக்கும் புனிதனே. | [3] |
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல் ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் நீலன் -நீலக்குடி உறை நின்மலன்; காலனார் உயிர் போக்கிய காலனே. | [4] |
நேச நீலக்குடி அரனே! எனா நீசராய், நெடுமால் செய்த மாயத்தால், ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய், நாசம் ஆனார், திரிபுரநாதரே. | [5] |
கொன்றை சூடியை, குன்றமகளொடும் நின்ற நீலக்குடி அரனே! எனீர்- என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்; பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே? | [6] |
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால், நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே! | [7] |
அழகியோம்; இளையோம் எனும் ஆசையால் ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே, நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே! | [8] |
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள் பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன் நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்; சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே. | [9] |
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால் நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும் இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே. | [10] |