சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
பண் - திருக்குறுந்தொகை   (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.072   வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநீலக்குடி ; (திருத்தலம் அருள்தரு நீலநிறவுமையம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செத்தபோது, செறியார் பிரிவதே;
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

[1]
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்-
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்,
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

[2]
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு-
கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான்; அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே.

[3]
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்;
காலனார் உயிர் போக்கிய காலனே.

[4]
நேச நீலக்குடி அரனே! எனா
நீசராய், நெடுமால் செய்த மாயத்தால்,
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்,
நாசம் ஆனார், திரிபுரநாதரே.

[5]
கொன்றை சூடியை, குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே! எனீர்-
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்;
பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?

[6]
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால்,
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!

[7]
அழகியோம்; இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே,
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!

[8]
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள்
பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்;
சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.

[9]
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால்
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும்
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list