சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல் வெணெய் விழுது பெய்து பண் - சாதாரி (திருநெல்வெண்ணெய் வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=w_RuIZ-JSkI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.096  
நல் வெணெய் விழுது பெய்து
பண் - சாதாரி (திருத்தலம் திருநெல்வெண்ணெய் ; (திருத்தலம் அருள்தரு நீலமலர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு வெண்ணையப்பர் திருவடிகள் போற்றி )
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும், நெல்வெணெய் மேவிய நீரே; நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும் சொல் வணம் இடுவது சொல்லே. | [1] |
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்க் கச்சு இள அரவு அசைத்தீரே; கச்சு இள அரவு அசைத்தீர்! உமைக் காண்பவர் அச்சமொடு அருவினை இலரே. | [2] |
நிரை விரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரை விரி கோவணத்தீரே; அரை விரி கோவணத்தீர்! உமை அலர்கொடு உரை விரிப்போர் உயர்ந்தோரே. | [3] |
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய ஊர் மல்கி உறைய வல்லீரே; ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல் பார் மல்கு புகழவர் பண்பே! | [4] |
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய ஆடு இளம் பாப்பு அசைத்தீரே! ஆடு இளம் பாப்பு அசைத்தீர்! உமை அன்பொடு பாடு உளம் உடையவர் பண்பே! | [5] |
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய பெற்றி கொள் பிறை நுதலீரே; பெற்றி கொள் பிறைநுதலீர்! உமைப் பேணுதல் கற்று அறிவோர்கள் தம் கடனே. | [6] |
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய கறை அணி மிடறு உடையீரே; கறை அணி மிடறு உடையீர்! உமைக் காண்பவர் உறைவதும் உம் அடிக்கீழே. | [7] |
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று அரக்கனை அசைவு செய்தீரே; அரக்கனை அசைவு செய்தீர்! உமை அன்பு செய்து இருக்க வல்லார் இடர் இலரே. | [8] |
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று இருவரை இடர்கள் செய்தீரே; இருவரை இடர்கள் செய்தீர்! உமை இசைவொடு பரவ வல்லார் பழி இலரே. | [9] |
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண் கெடுத்தீரே; சாக்கியச் சமண் கெடுத்தீர்! உமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே. | [10] |
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை, நலம் மல்கு ஞானசம்பந்தன் நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் துயர் இலரே. | [11] |