சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறவம் நிறை வண்டு அறை பண் - தக்கேசி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=bRUUHP2wuvg |
1.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று பண் - குறிஞ்சி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs |
3.084
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் இயல் உருவினர், பெருகிய பண் - சாதாரி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=IBQf-wnI-Qo |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.074  
நறவம் நிறை வண்டு அறை
பண் - தக்கேசி (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான், புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [1] |
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம் விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால் பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக, இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [2] |
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க, கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி, அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி, எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [3] |
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்; கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை, புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக, எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [4] |
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும், தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை; பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக, எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [5] |
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய், அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து, புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக, என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [6] |
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர் விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல், பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக, எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [7] |
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக, எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [8] |
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப் படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில் பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக, இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [9] |
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர், கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும் போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக, ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [10] |
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை, தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.097  
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச் செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும் பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே. | [1] |
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும் மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட, போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே. | [2] |
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர் பற்று ஆய், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும் பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே. | [3] |
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து, மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட, பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும் பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே. | [4] |
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும், காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு, பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும் பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே. | [5] |
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம் அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப் பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே. | [6] |
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன, கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப் பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே. | [7] |
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத் துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும் அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்; புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே. | [8] |
மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும், மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே. | [9] |
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்; மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம் கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர் பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே. | [10] |
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்- இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.084  
பெண் இயல் உருவினர், பெருகிய
பண் - சாதாரி (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக் கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர் நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே. | [1] |
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர் அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில் திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும் புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே. | [2] |
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு- பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய் தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே. | [3] |
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை, மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார் சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே. | [4] |
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில் தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே. | [5] |
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட, முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே. | [6] |
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர் பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர், எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே. | [7] |
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும் நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே. | [8] |
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில் ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும், வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப் போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே. | [9] |
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர் பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர் நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி, பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே! | [10] |
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை, வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்- ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே. | [11] |