சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.062
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காயச் செவ்விக் காமற் காய்ந்து, பண் - காந்தாரம் (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nZvUZrPNWtM |
5.011
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், பண் - திருக்குறுந்தொகை (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=IjwwKbqNYI4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.062  
காயச் செவ்விக் காமற் காய்ந்து,
பண் - காந்தாரம் (திருத்தலம் திருமீயச்சூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப் பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன் மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே! | [1] |
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்; நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி, ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி, மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே. | [2] |
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான், மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை, தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார் அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே. | [3] |
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட, நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன் மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே. | [4] |
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட, நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன் மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே. | [5] |
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை ஒளிரும் பிறை ஒன்று உடையான், ஒருவன், கை கோடி நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன், மிளிரும்(ம்) அரவம் உடையான் மீயச்சூரானே. | [6] |
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார், கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார், காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர், மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே. | [7] |
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர், ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே. | [8] |
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார், போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே. | [9] |
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார்; பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே. | [10] |
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர், நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி, ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.011  
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமீயச்சூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே. | [1] |
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன், சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே. | [2] |
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார், அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,- நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே! | [3] |
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் வேறு வேறு விரித்த சடை இடை ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர், ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே. | [4] |
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர், செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர், எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே? | [5] |
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும், பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று; மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர், இன்ன நாள் அகலார், இளங்கோயிலே. | [6] |
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன், சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன், விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர், இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே. | [7] |
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும், கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர், ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே. | [8] |
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர், பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே; கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர், ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே. | [9] |
கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற, விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர், இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே. | [10] |