சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரை உலாம் கடலில் பொலி பண் - இந்தளம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So |
3.055
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை ஆர் கொன்றையினாய்! விடம் பண் - கௌசிகம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=sw6WWvnkIic |
5.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண்ட மா மலர் கொண்டு பண் - திருக்குறுந்தொகை (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=HxzGOdDxr18 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.004  
கரை உலாம் கடலில் பொலி
பண் - இந்தளம் (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்; உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர் வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே? | [1] |
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம் சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர், சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர் அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே? | [2] |
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம் தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர், தோல் நயங்கு அமர் ஆடையினீர்! அடிகேள்! சொலீர் ஆனைஅங்க உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே? | [3] |
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச் செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர், துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர் வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே? | [4] |
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர், துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர் விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே? | [5] |
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம் தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர், சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர் மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே? | [6] |
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த் தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர், தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர் பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே? | [7] |
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத் திக்கில் வந்து அலற அடர்த்தீர்! திரு வான்மியூர்த் தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர் பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே? | [8] |
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால் திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர், சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர் எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே? | [9] |
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம் செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர் கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே? | [10] |
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர் ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.055  
விரை ஆர் கொன்றையினாய்! விடம்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே! உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [1] |
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்! கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்! செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [2] |
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே! மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே! செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் ஐயா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [3] |
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே! மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே! தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில் அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [4] |
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல் எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ் திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும் அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [5] |
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்; ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும் சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும் ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [6] |
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும் கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்! தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [7] |
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும், நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே! செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [9] |
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள் கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்! திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [10] |
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை, சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல், குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.082  
விண்ட மா மலர் கொண்டு
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர், அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்! பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும், வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே. | [1] |
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர், மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும், மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே. | [2] |
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து, அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று, எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல், வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே. | [3] |
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன் வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே. | [4] |
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை, வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை, தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே. | [5] |
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்; பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல், வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே. | [6] |
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக் குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர், சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர், வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே. | [7] |
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய், பாதி பெண் உருஆய பரமன் என்று ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர் வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே. | [8] |
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில், வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே. | [9] |
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச் சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்; ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும், வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே. | [10] |