சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரை உலாம் கடலில் பொலி
பண் - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So
3.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரை ஆர் கொன்றையினாய்! விடம்
பண் - கௌசிகம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=sw6WWvnkIic
5.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ட மா மலர் கொண்டு
பண் - திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=HxzGOdDxr18

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.004   கரை உலாம் கடலில் பொலி  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?

[1]
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே?

[2]
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,
தோல் நயங்கு அமர் ஆடையினீர்! அடிகேள்! சொலீர்
ஆனைஅங்க உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?

[3]
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே?

[4]
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?

[5]
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே?

[6]
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே?

[7]
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்
திக்கில் வந்து அலற அடர்த்தீர்! திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?

[8]
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?

[9]
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்
செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர்
கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?

[10]
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.055   விரை ஆர் கொன்றையினாய்! விடம்  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[1]
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்!
கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[2]
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!
மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[3]
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே!
மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!
தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்
அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[4]
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[5]
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்;
ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்
ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[6]
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[7]
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும்,
நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே!
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[9]
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்!
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[10]
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.082   விண்ட மா மலர் கொண்டு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.

[1]
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர்,
மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து
அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும்,
மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே.

[2]
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,
அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று,
எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல்,
வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

[3]
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன்
வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.

[4]
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை,
வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை,
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

[5]
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்;
பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று
அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல்,
வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

[6]
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர்,
சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர்,
வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

[7]
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய்,
பாதி பெண் உருஆய பரமன் என்று
ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

[8]
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி
நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில்,
வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

[9]
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்
சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்;
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்,
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list