சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.061
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய பண் - பஞ்சமம் (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H6zhIByTE68 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.061  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருவெண்டுறை ; (திருத்தலம் அருள்தரு வேனெடுங்கண்ணியம்மை உடனுறை அருள்மிகு வெண்டுறைநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன், பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன், போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [1] |
காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான்; பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்; மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்; வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [2] |
படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை உடையான், கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான், உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடிய விடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [3] |
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம் எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான், பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான், விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [4] |
பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்; சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்; போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா, வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [5] |
ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு அரியான்; போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்; யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின் வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [6] |
கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப் பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான், சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள் வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [7] |
கரம் இரு-பத்தினாலும் கடுவெஞ்சினம் ஆய் எடுத்த சிரம் ஒருபத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான், பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒருபாகமும் பெண் விரவிய வேடத்தினான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [8] |
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும், சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்; மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்; வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [9] |
நக்க உரு ஆயவரும், துவர் ஆடை நயந்து உடை ஆம் பொக்கர்கள், தம் உரைகள்(ள்) அவை பொய் என, எம் இறைவன், திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான், கனகம் மிக்கு உயர் சோதி அவன், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [10] |
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை, தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்- எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே. | [11] |