சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=Jnc6OmuPIhc
2.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநாகேச்சுரம் - செவ்வழி அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
[ 1]
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும்(ம்) இடம் மண் உளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம்,
கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே
[ 2]
குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி
குலவு நீர்,
பறவை ஆல, பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்
இல்லையே.
[ 3]
கூசம் நோக்காது முன் சொன்ன பொய், கொடுவினை,
குற்றமும்,
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம்,
தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார்; நெறிப்பாலரே.
[ 4]
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு, நீர்
பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்று, உடன் ஆவதும்
உண்மையே.
[ 5]
Go to top
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும்,
நீளம் ஆய் நின்று எய்த காமனும், பட்டன நினைவு உறின்,
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம்;
குறிக்கொண்மினே!
[ 6]
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும் விராய்,
பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம்
மேயவன்தன் அடி போற்றி! என்பார் வினை வீடுமே.
[ 7]
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில் தோள்களும்,
மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும்
நாகேச்சுரம்,
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.
[ 8]
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா
எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே
[ 9]
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர், சாக்கியர்,
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும்! வெள்ளில் அம்காட்டு
இடை
நட்டிருள்கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்,
மட்டு இருக்கும் மலர் இட்டு, அடி வீழ்வது வாய்மையே.
[ 10]
Go to top
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம்
பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள்,
போய்,
எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநாகேச்சுரம்
2.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
Tune - இந்தளம்
(திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
2.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,
Tune - செவ்வழி
(திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400