சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅவளிவணல்லூர் - சாதாரி அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சாட்சிநாயகர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=Ao3mW_l30rI  
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.


[ 1]


ஓமையன, கள்ளியன, வாகையன, கூகை முரல் ஓசை,
ஈமம் எரி, சூழ் சுடலை வாசம்; முதுகாடு நடம் ஆடி;
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி, மிக்கு ஒளி துளங்க,
ஆமையொடு பூணும் அடிகள்(ள்); உறைவது
அவளிவணலூரே.


[ 2]


நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.


[ 3]


பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர் என்று உலகு பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
அவளிவணலூரே.


[ 4]


குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.


[ 5]


Go to top
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து
நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்;
மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி,
அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.


[ 6]


கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம் ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
அவளிவணலூரே.


[ 7]


ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன், இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ? என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.


[ 8]


பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்,
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர்மேல் விழுமியோனும்,
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே.


[ 9]


கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.


[ 10]


Go to top
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅவளிவணல்லூர்
3.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொம்பு இரிய வண்டு உலவு
Tune - சாதாரி   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)
4.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்
Tune - திருநேரிசை   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song