சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=mAbV4GbLfL8
4.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்கடவூர் வீரட்டம் - சாளரபாணி அருள்தரு அபிராமியம்மை உடனுறை அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=9UeX47SUCUY
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.
[ 1]
மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில்,
விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?
பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.
[ 2]
பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா
ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.
[ 3]
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே.
[ 4]
தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி,
விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்;
மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே!
[ 5]
Go to top
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்;
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!
[ 6]
மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!
[ 7]
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்;
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;
எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!
[ 8]
சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய்,
பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.
[ 9]
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்-
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய,
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கடவூர் வீரட்டம்
3.008
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை உடையானும், நெய் ஆடலானும்,
Tune - காந்தாரபஞ்சமம்
(திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
4.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
Tune - சாளரபாணி
(திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
4.107
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த
Tune - திருவிருத்தம்
(திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
5.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
மலைக் கொள் ஆனை மயக்கிய
Tune - திருக்குறுந்தொகை
(திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
7.028
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொடி ஆர் மேனியனே! புரி
Tune - நட்டராகம்
(திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400