சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கோவலூர் - திருநேரிசை அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA  
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!


[ 1]


தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்-
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!


[ 2]


வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன்,
இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்-
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!


[ 3]


சாற்றுவர், ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி
காற்றுவர், கனலப் பேசி; கண் செவி மூக்கு வாயுள
ஆற்றுவர்; அலந்து போனேன், ஆதியை அறிவு ஒன்று இன்றி;
கூற்றுவர் வாயில் பட்டேன்-கோவல் வீரட்டனீரே!


[ 4]


தடுத்திலேன், ஐவர் தம்மை; தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன்; பரப்பு நோக்கிப் பல்மலர்(ப்) பாதம் முற்ற
அடுத்திலேன்; சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன்; கொடியவா, நான்! கோவல் வீரட்டனீரே!


[ 5]


Go to top
மாச் செய்த குரம்பை தன்னை மண் இடை மயக்கம் எய்தும்
நாச் செய்து, நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து,
காச் செய்த காயம் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன்-கோவல் வீரட்டனீரே!


[ 6]


படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!


[ 7]


பிச்சு இலேன், பிறவி தன்னைப் பேதையேன் ; பிணக்கம் என்னும்
ச்சுளே அழுந்தி வீழ்ந்து, துயரமே இடும்பை தன்னுள்
சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய், வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே!-கோவல் வீரட்டனீரே!


[ 8]


நிணத்து இடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்க மாட்டேன்;
மனத்து இடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும்
கணத்து இடை ஆட்டப் பட்டு, காதலால் உன்னைப் பேணும்
குணத்து இடை வாழ மாட்டேன்-கோவல் வீரட்டனீரே!


[ 9]


விரிகடல் இலங்கைக் கோனை வியன் கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றி,
பரவிய பாடல் கேட்டு, படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனாரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோவலூர்
4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
Tune - திருநேரிசை   (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song