சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.044   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=WFDXm6GlCIw  
மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.


[ 1]


சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.


[ 2]


காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான்,
போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்;
ஆமாத்தூர் அரனேழு என்று அழைத்தலும்,
தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.


[ 3]


பஞ்ச பூதவலையில் படுவதற்கு
அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும்,
வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!


[ 4]


குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்,
அரா மன்னும் சடையான், திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை,
நிராமயன் தனை, நாளும் நினைமினே!


[ 5]


Go to top
பித்தனை, பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை, அடியேன் உள் முயறலும்,
பத்திவெள்ளம் பரந்தது; காண்மினே!


[ 6]


நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை
கூற்றினான்; குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான்; அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே.


[ 7]


பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர்
சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!


[ 8]


குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உயக்-
கொண்ட நாதன், குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார், இடம் ஆமாத்தூர்; காண்மினே!


[ 9]


வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!


[ 10]


Go to top
விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி
அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர்
இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாமாத்தூர்
5.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா மாத்து ஆகிய மால்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
6.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணங்கள் தாம் பாடி, வந்து
Tune - திருத்தாண்டகம்   (திருவாமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song