சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவெண்காடு - திருக்குறுந்தொகை அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=O8oFU5IjueQ  
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!


[ 1]


கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,
ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார்,
வெள்ளியன், கரியன், பசு ஏறிய
தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!


[ 2]


ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே,
வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ!
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்-
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!


[ 3]


பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே;
பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம்
திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!


[ 4]


பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன்
உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள்
கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!


[ 5]


Go to top
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்;
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்;
சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்-
காடனார்; அடியே அடை, நெஞ்சமே!


[ 6]


தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்;
புரித்த புன் சடையான்; கயவர் புரம்
எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!


[ 7]


பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன், ஆதி என்று(ச்) சிந்தை செய்யவே,
நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற
அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!


[ 8]


ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!


[ 9]


பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர்,
சேலை ஆடிய கண் உமை பங்கனார்,
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே.


[ 10]


Go to top
இரா வணம் செய, மா மதி பற்று அவ், ஐ-
யிரா வணம்(ம்) உடையான் தனை உள்குமின்!
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திரு வெண்காடு அடைமினே!


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்காடு
2.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் காட்டும் நுதலானும், கனல்
Tune - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
Tune - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் மேனித் தூநீறு
Tune - திருத்தாண்டகம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   படம் கொள் நாகம் சென்னி
Tune - இந்தளம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song