சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குறி கலந்த இசை பாடலினான்,  (திருப்புகலூர்)  
3 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பத்தரோடு பலரும் பொலிய மலர்  (திருவலிதாயம் (பாடி))  
4 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மைம் மரு பூங்குழல் கற்றை  (திருவீழிமிழலை)  
5 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய் அருகே புனல் பாய,  (கீழைத்திருக்காட்டுப்பள்ளி)  
6 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)  
7 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடக மெல் அடிப் பாவையோடும்,  (திருநள்ளாறும் திருஆலவாயும்)  
8 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புண்ணியர், பூதியர், பூத நாதர்,  (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்))  
9 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு ஆர் குழல் அரிவையொடு  (திருவேணுபுரம் (சீர்காழி))  
10 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  (திருவண்ணாமலை)  
11 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை ஆர் புனல் உடையான்,  (திருவீழிமிழலை)  
12 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தா வரை நிறுவி, கடல்  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
13 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குரவம் கமழ் நறு மென்  (திருவியலூர்)  
14 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானில் பொலிவு எய்தும் மழை  (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை))  
15 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மை ஆடிய கண்டன், மலை  (திருநெய்த்தானம்)  
16 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் உந்து உறு திரள்  (திருப்புள்ளமங்கை)  
17 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்  (திருஇடும்பாவனம்)  
18 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  (திருநின்றியூர்)  
19 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை அணி படர் சடை  (சீர்காழி)  
20 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தட நிலவிய மலை நிறுவி,  (திருவீழிமிழலை)  
21 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புவம், வளி, கனல், புனல்,  (திருச்சிவபுரம்)  
22 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிலை தனை நடு இடை  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
23 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  (திருக்கோலக்கா)  
24 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூஆர் கொன்றைப் புரிபுன் சடை  (சீர்காழி)  
25 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு ஆர் குழலிமாது ஓர்  (திருச்செம்பொன்பள்ளி)  
26 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு வெறி  (திருப்புத்தூர்)  
27 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முந்தி நின்ற வினைகள் அவை  (திருப்புன்கூர்)  
28 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  (திருச்சோற்றுத்துறை)  
29 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊர் உலாவு பலி கொண்டு,  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
30 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விதி ஆய், விளைவு ஆய்,  (திருப்புகலி -(சீர்காழி ))  
31 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விழுநீர், மழுவாள் படை, அண்ணல்  (திருக்குரங்குஅணில்முட்டம்)  
32 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓடே கலன்; உண்பதும் ஊர்  (திருவிடைமருதூர்)  
33 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கணை நீடு எரி, மால்,  (திருஅன்பில் ஆலந்துறை)  
34 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடல் ஏறு அமரும் கொடி  (சீர்காழி)  
35 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரை ஆர் விரி கோவண  (திருவீழிமிழலை)  
36 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை ஆர் மதியோடு உர  (திருவையாறு)  
37 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரவச் சடை மேல் மதி,  (திருப்பனையூர்)  
38 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்  (திருமயிலாடுதுறை)  
39 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  (திருவேட்களம்)  
40 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி உடை மார்பினர், போர்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
41 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் அணி திகழ் திருமார்பில்  (திருப்பாம்புரம்)  
42 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைம் மா நாகம், பல்மலர்க்  (திருப்பேணுபெருந்துறை)  
43 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடம் திகழ் மென் முலையாளைப்  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))  
44 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துணி வளர் திங்கள் துளங்கி  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))  
45 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்  (திருவாலங்காடு (பழையனூர்))  
46 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குண்டைக் குறள் பூதம் குழும,  (திருவதிகை வீரட்டானம்)  
47 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பல் அடைந்த வெண் தலையில்  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
48 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நூல் அடைந்த கொள்கையாலே நுன்  (திருச்சேஞலூர்)  
49 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -போகம் ஆர்த்த பூண் முலையாள்  (திருநள்ளாறு)  
50 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒல்லைஆறி உள்ளமொன்றிக்  (திருவலிவலம்)  
51 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கண் ஆனை ஈர்  (திருச்சோபுரம் (தியாகவல்லி))  
52 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறை உடையாய்! தோல் உடையாய்!  (திருநெடுங்களம்)  
53 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
54 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூத் தேர்ந்து ஆயன கொண்டு,  (திருஓத்தூர் (செய்யாறு))  
55 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,  (திருமாற்பேறு)  
56 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கார் ஆர் கொன்றை கலந்த  (திருப்பாற்றுறை)  
57 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;  (திருவேற்காடு)  
58 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரியும், நம் வினை உள்ளன  (திருக்கரவீரம்)  
59 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,  (திருத்தூங்கானைமாடம்)  
60 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண் தரங்கப் புனல் கமல  (சீர்காழி )  
61 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறை கொண்ட மலர் தூவி,  (திருச்செங்காட்டங்குடி)  
62 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நாள் ஆய போகாமே, நஞ்சு  (திருக்கோளிலி (திருக்குவளை))  
63 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரி ஆர் மழு ஒன்று  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
64 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறை ஆர் புனலும் மா  (திருப்பூவணம்)  
65 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் தம் புரங்கள் மூன்றும்  (திருப்பல்லவனீச்சரம்)  
66 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பங்கம் ஏறு மதி சேர்  (திருச்சண்பைநகர் (சீர்காழி))  
67 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி  (திருப்பழனம்)  
68 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் உருவர், புலியின்  (திருக்கயிலாயம்)  
69 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ ஆர் மலர் கொண்டு  (திருவண்ணாமலை)  
70 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானத்து உயர் தண்மதி தோய்  (திருஈங்கோய்மலை)  
71 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை கொள் சடையர்; புலியின்  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
72 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் ஆர் கொங்கை மாது  (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்))  
73 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் ஆர் சோதி மன்னு  (திருக்கானூர்)  
74 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறவம் நிறை வண்டு அறை  (திருப்புறவம்)  
75 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை நல்மாமலர் கொண்டு அடி  (திருவெங்குரு (சீர்காழி))  
76 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,  (திருஇலம்பையங்கோட்டூர்)  
77 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் திரண்டன்ன புரிசடை புரள,  (திருஅச்சிறுபாக்கம்)  
78 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரி வளர் அவிர் ஒளி  (திருஇடைச்சுரம்)  
79 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் உறு படையினர்; விடையினர்;  (சீர்காழி)  
80 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  (கோயில் (சிதம்பரம்))  
81 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லார், தீ மேவும் தொழிலார்,  (சீர்காழி)  
82 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இரும் பொன்மலை வில்லா, எரி  (திருவீழிமிழலை)  
83 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் புரம் மூன்றும் அனல்வாய்  (திருஅம்பர்மாகாளம்)  
84 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
85 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நிழல் மேய கறை  (திருநல்லம்)  
86 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டும் பறை சீரால் குழும,  (திருநல்லூர்)  
87 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடு கூர் எரிமாலை அணிவர்;  (திருவடுகூர் (ஆண்டார்கோவில்))  
88 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முற்றும் சடை முடி மேல்  (திருஆப்பனூர்)  
89 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை ஆர்தரு பூதப் பகடு  (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்))  
90 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
91 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி  (திருவாரூர்)  
92 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  (திருவீழிமிழலை)  
93 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நின்று மலர் தூவி, இன்று  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
94 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்  (திருஆலவாய் (மதுரை))  
95 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு ஓர் காதினன்; பாடு  (திருவிடைமருதூர்)  
96 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மன்னி ஊர் இறை; சென்னியார்,  (திருஅன்னியூர் (பொன்னூர்))  
97 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  (திருப்புறவம்)  
98 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நன்று உடையானை, தீயது இலானை,  (திருச்சிராப்பள்ளி)  
99 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வம்பு ஆர் குன்றம், நீடு  (திருக்குற்றாலம்)  
100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடு அலர் சோதி வெண்பிறையோடு  (திருப்பரங்குன்றம்)  
101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தண் ஆர் திங்கள், பொங்கு  (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) )  
102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரவு ஆர் கலையின் கவிதைப்  (சீர்காழி)  
103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடையான் ஒரு காதில்-தூய  (திருக்கழுக்குன்றம்)  
104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்  (திருப்புகலி -(சீர்காழி ))  
105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடலன் நால்மறையன்; படி பட்ட  (திருவாரூர்)  
106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாறு இல் அவுணர் அரணம்  (திருஊறல் (தக்கோலம்))  
107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண் நீறு அணிந்து,  (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு))  
108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்  (திருப்பாதாளீச்சரம்)  
109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் உறு வனமுலை மங்கை  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,  (திருவிடைமருதூர்)  
111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்  (திருக்கடைமுடி (கீழையூர்))  
112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்குரல் இசை கெழும் யாழ்  (திருச்சிவபுரம்)  
113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,  (திருவல்லம்)  
114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குருந்து அவன், குருகு அவன்,  (திருமாற்பேறு)  
115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு ஒளிர் முன் கையர்  (திருஇராமனதீச்சரம்)  
116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அவ் வினைக்கு இவ் வினை  (பொது -திருநீலகண்டப்பதிகம்)  
117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு அது, அணிகலம் கார்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))  
119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முள்ளின் மேல் முது கூகை  (திருக்கள்ளில்)  
120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பணிந்தவர் அருவினை பற்று அறுத்து  (திருவையாறு)  
121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நடை மரு திரிபுரம் எரியுண  (திருவிடைமருதூர்)  
122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்  (திருவிடைமருதூர்)  
123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ இயல் புரிகுழல்; வரிசிலை  (திருவலிவலம்)  
124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்  (திருவீழிமிழலை)  
125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை மலி அகல் அல்குல்  (திருச்சிவபுரம்)  
126 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்தத்தால் வந்து எப்பால் பயின்று  (சீர்காழி)  
127 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
128 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓர் உரு ஆயினை; மான்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
129 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சே உயரும் திண் கொடியான்  (சீர்காழி)  
130 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புலன் ஐந்தும் பொறி கலங்கி,  (திருவையாறு)  
131 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
132 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  (திருவீழிமிழலை)  
133 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
134 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருத்தன், கடவுள், கனல் ஏந்தி  (திருப்பறியலூர் (பரசலூர்))  
135 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு சேர்வது ஒர் மேனியர்,  (திருப்பராய்துறை)  
136 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாதர் மடப்பிடியும் மட அன்னமும்  (தருமபுரம்)  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.001  
தோடு உடைய செவியன், விடை   பண் - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.002  
குறி கலந்த இசை பாடலினான்,   பண் - நட்டபாடை   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.003  
பத்தரோடு பலரும் பொலிய மலர்   பண் - நட்டபாடை   (திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர் தாயம்மை)

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.004  
மைம் மரு பூங்குழல் கற்றை   பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)

மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்,
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய்
மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.005  
செய் அருகே புனல் பாய,   பண் - நட்டபாடை   (கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியச்சுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)

செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.006  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்   பண் - நட்டபாடை   (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.007  
பாடக மெல் அடிப் பாவையோடும்,   பண் - நட்டபாடை   (திருநள்ளாறும் திருஆலவாயும் தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை)

பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.008  
புண்ணியர், பூதியர், பூத நாதர்,   பண் - நட்டபாடை   (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) பசுபதீச்சுரர் மங்களநாயகியம்மை)

புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.009  
வண்டு ஆர் குழல் அரிவையொடு   பண் - நட்டபாடை   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.010  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய   பண் - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.011  
சடை ஆர் புனல் உடையான்,   பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.012  
மத்தா வரை நிறுவி, கடல்   பண் - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.013  
குரவம் கமழ் நறு மென்   பண் - நட்டபாடை   (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை)

குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,
பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,
அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.014  
வானில் பொலிவு எய்தும் மழை   பண் - நட்டபாடை   (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.015  
மை ஆடிய கண்டன், மலை   பண் - நட்டபாடை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.016  
பால் உந்து உறு திரள்   பண் - நட்டபாடை   (திருப்புள்ளமங்கை பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை)

பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.017  
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்   பண் - நட்டபாடை   (திருஇடும்பாவனம் சற்குணநாதர் மங்களநாயகியம்மை)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,
தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.018  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,   பண் - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)

சூலம்படை; சுண்ணப்பொடி சாந்தம்,சுடு நீறு;
பால்அம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலினொடு போக்கி,கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.019  
பிறை அணி படர் சடை   பண் - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்  உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.020  
தட நிலவிய மலை நிறுவி,   பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.021  
புவம், வளி, கனல், புனல்,   பண் - நட்டபாடை   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.022  
சிலை தனை நடு இடை   பண் - நட்டபாடை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)

சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்   பண் - தக்கராகம்   (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)

மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.024  
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை   பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.025  
மரு ஆர் குழலிமாது ஓர்   பண் - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)

மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.026  
வெங் கள் விம்மு வெறி   பண் - தக்கராகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)

வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.027  
முந்தி நின்ற வினைகள் அவை   பண் - தக்கராகம்   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)

முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.028  
செப்பம் நெஞ்சே, நெறி கொள்!   பண் - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)

செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.029  
ஊர் உலாவு பலி கொண்டு,   பண் - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.030  
விதி ஆய், விளைவு ஆய்,   பண் - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.031  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல்   பண் - தக்கராகம்   (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)

விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.032  
ஓடே கலன்; உண்பதும் ஊர்   பண் - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.033  
கணை நீடு எரி, மால்,   பண் - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)

கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.034  
அடல் ஏறு அமரும் கொடி   பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.035  
அரை ஆர் விரி கோவண   பண் - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.036  
கலை ஆர் மதியோடு உர   பண் - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.037  
அரவச் சடை மேல் மதி,   பண் - தக்கராகம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)

அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.038  
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்   பண் - தக்கராகம்   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

கரவு இன்றி நல்மாமலர் கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.039  
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்   பண் - தக்கராகம்   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.040  
பொடி உடை மார்பினர், போர்   பண் - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)

பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.041  
சீர் அணி திகழ் திருமார்பில்   பண் - தக்கராகம்   (திருப்பாம்புரம் பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)

சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.042  
பைம் மா நாகம், பல்மலர்க்   பண் - தக்கராகம்   (திருப்பேணுபெருந்துறை சிவாநந்தநாதர் மலையரசியம்மை)

பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,
செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.043  
வடம் திகழ் மென் முலையாளைப்   பண் - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)

வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.044  
துணி வளர் திங்கள் துளங்கி   பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.045  
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்   பண் - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)

துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.046  
குண்டைக் குறள் பூதம் குழும,   பண் - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி,
கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம்,
வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை
விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.047  
பல் அடைந்த வெண் தலையில்   பண் - பழந்தக்கராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்   பண் - பழந்தக்கராகம்   (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,
ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்   பண் - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.050  
ஒல்லைஆறி உள்ளமொன்றிக்   பண் - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)

ஒல்லைஆறி உள்ளமொன்றிக் கள்ளம் ஒழிந் துவெய்ய
சொல்லைஆறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன் நாமம் நாவில்நவின் ஏத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம்மே யவனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.051  
வெங் கண் ஆனை ஈர்   பண் - பழந்தக்கராகம்   (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)

வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!   பண் - பழந்தக்கராகம்   (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)

மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.053  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை   பண் - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,   பண் - பழந்தக்கராகம்   (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)

பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.055  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,   பண் - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.056  
கார் ஆர் கொன்றை கலந்த   பண் - பழந்தக்கராகம்   (திருப்பாற்றுறை திருமூலநாதர் மோகாம்பிகையம்மை)

கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார், ஆர் ஆதி முதல்வரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.057  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;   பண் - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)

ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.058  
அரியும், நம் வினை உள்ளன   பண் - பழந்தக்கராகம்   (திருக்கரவீரம் கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை)

அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.059  
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,   பண் - பழந்தக்கராகம்   (திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)

ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.060  
வண் தரங்கப் புனல் கமல   பண் - பழந்தக்கராகம்   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.061  
நறை கொண்ட மலர் தூவி,   பண் - பழந்தக்கராகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)

நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு   பண் - பழந்தக்கராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.063  
எரி ஆர் மழு ஒன்று   பண் - தக்கேசி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.064  
அறை ஆர் புனலும் மா   பண் - தக்கேசி   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)

அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.065  
அடையார் தம் புரங்கள் மூன்றும்   பண் - தக்கேசி   (திருப்பல்லவனீச்சரம் பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை)

அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,
விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,
படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.066  
பங்கம் ஏறு மதி சேர்   பண் - தக்கேசி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.067  
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி   பண் - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.068  
பொடி கொள் உருவர், புலியின்   பண் - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.069  
பூ ஆர் மலர் கொண்டு   பண் - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.070  
வானத்து உயர் தண்மதி தோய்   பண் - தக்கேசி   (திருஈங்கோய்மலை )

வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.071  
பிறை கொள் சடையர்; புலியின்   பண் - தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.072  
வார் ஆர் கொங்கை மாது   பண் - தக்கேசி   (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்) சோமநாதர் தேனார்மொழியம்மை)

வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.073  
வான் ஆர் சோதி மன்னு   பண் - தக்கேசி   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)

வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.074  
நறவம் நிறை வண்டு அறை   பண் - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.075  
காலை நல்மாமலர் கொண்டு அடி   பண் - குறிஞ்சி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.076  
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,   பண் - குறிஞ்சி   (திருஇலம்பையங்கோட்டூர் சந்திரசேகரர் கோடேந்துமுலையம்மை)

மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர்
மறைக்காடு, நெய்த் தானம்,
நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம்
பெடை புல்கிக் கணமயில் ஆலும்
இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.077  
பொன் திரண்டன்ன புரிசடை புரள,   பண் - குறிஞ்சி   (திருஅச்சிறுபாக்கம் பாக்கபுரேசர் சுந்தரமாதம்மை)

பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.078  
வரி வளர் அவிர் ஒளி   பண் - குறிஞ்சி   (திருஇடைச்சுரம் இடைச்சுரநாதர் இமயமடக்கொடியம்மை)

வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.079  
அயில் உறு படையினர்; விடையினர்;   பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும்
மதியமும் விரவிய அழகர்;
மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை
முகில் புல்கும் மிடறர்;
பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி
கொள்வர்; வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை   பண் - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.081  
நல்லார், தீ மேவும் தொழிலார்,   பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.082  
இரும் பொன்மலை வில்லா, எரி   பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.083  
அடையார் புரம் மூன்றும் அனல்வாய்   பண் - குறிஞ்சி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.084  
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்   பண் - குறிஞ்சி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய
நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி,
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு,
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.085  
கல்லால் நிழல் மேய கறை   பண் - குறிஞ்சி   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)

கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.086  
கொட்டும் பறை சீரால் குழும,   பண் - குறிஞ்சி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி,
நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை
முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு-
பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.087  
சுடு கூர் எரிமாலை அணிவர்;   பண் - குறிஞ்சி   (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை)

சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.088  
முற்றும் சடை முடி மேல்   பண் - குறிஞ்சி   (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை)

முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.089  
படை ஆர்தரு பூதப் பகடு   பண் - குறிஞ்சி   (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை)

படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.090  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்   பண் - குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.091  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி   பண் - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு   பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.093  
நின்று மலர் தூவி, இன்று   பண் - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்   பண் - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.095  
தோடு ஓர் காதினன்; பாடு   பண் - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-
காடு பேணி நின்று ஆடும் மருதனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.096  
மன்னி ஊர் இறை; சென்னியார்,   பண் - குறிஞ்சி   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.097  
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று   பண் - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.098  
நன்று உடையானை, தீயது இலானை,   பண் - குறிஞ்சி   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.099  
வம்பு ஆர் குன்றம், நீடு   பண் - குறிஞ்சி   (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை)

வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்
கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை
நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.100  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு   பண் - குறிஞ்சி   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)

நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.101  
தண் ஆர் திங்கள், பொங்கு   பண் - குறிஞ்சி   (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை)

தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.102  
உரவு ஆர் கலையின் கவிதைப்   பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி
அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா! என்பார் தத்துவஞானத் தலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.103  
தோடு உடையான் ஒரு காதில்-தூய   பண் - குறிஞ்சி   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)

தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ
ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.104  
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.105  
பாடலன் நால்மறையன்; படி பட்ட   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.106  
மாறு இல் அவுணர் அரணம்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை)

மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.107  
வெந்த வெண் நீறு அணிந்து,   பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி)

வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.108  
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பாதாளீச்சரம் )

மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்
பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.109  
வார் உறு வனமுலை மங்கை   பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
நீர் உறு சடை முடி நிமலன், இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வளவயல் சிரபுரமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.110  
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான்,
அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன், வள நகர் இடைமருதே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.111  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை)

அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.112  
இன்குரல் இசை கெழும் யாழ்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழங்காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.113  
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)

எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.114  
குருந்து அவன், குருகு அவன்,   பண் - வியாழக்குறிஞ்சி   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,
பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன்,
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன், வள நகர் மாற்பேறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.115  
சங்கு ஒளிர் முன் கையர்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)

சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன தீச்சரமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.116  
அவ் வினைக்கு இவ் வினை   பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -திருநீலகண்டப்பதிகம் )

அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.117  
காடு அது, அணிகலம் கார்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,-
தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்;
வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்;
பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.118  
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)

சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.119  
முள்ளின் மேல் முது கூகை   பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)

முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,
வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.120  
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.121  
நடை மரு திரிபுரம் எரியுண   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்,
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,
இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.122  
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.123  
பூ இயல் புரிகுழல்; வரிசிலை   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.124  
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.125  
கலை மலி அகல் அல்குல்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,
இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று   பண் - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்
பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும்,
சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால்
தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக்
காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.127  
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.128  
ஓர் உரு ஆயினை; மான்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.129  
சே உயரும் திண் கொடியான்   பண் - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.130  
புலன் ஐந்தும் பொறி கலங்கி,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.131  
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே-
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.132  
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.133  
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்   பண் - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.134  
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் )

கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்-
திருத்தம் உடையார் திருப் பறியலூரில்,
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.135  
நீறு சேர்வது ஒர் மேனியர்,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.136  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும்   பண் - யாழ்முரி   (தருமபுரம் திருதருமபுரம் பண் - யாழ்மூரி)

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,
பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்,
அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

[1]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai number prod lang malayalam