சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=ddugfJ2ujhU
4.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமறைக்காடு (வேதாரண்யம்) - திருநேரிசை அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.
[ 1]
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை;
அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;-
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.
[ 2]
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி,
அகப்படுத்து! என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன்
உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.
[ 3]
அந்தரம் தேர் கடாவி, ஆர் இவன்? என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.
[ 4]
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்! என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.
[ 5]
Go to top
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன் என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.
[ 6]
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், மா வலியன் என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக்
கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்-
முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.
[ 7]
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி,
புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான்,
மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே
நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!
[ 8]
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி,
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்)
ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.
[ 9]
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருமறைக்காடு (வேதாரண்யம்)
1.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சிலை தனை நடு இடை
Tune - நட்டபாடை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
Tune - இந்தளம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேய் உறு தோளி பங்கன்,
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) )
2.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
3.076
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல் பொலி சுரத்தின் எரி
Tune - சாதாரி
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
Tune - திருநேரிசை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
Tune - திருநேரிசை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.009
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதம் மால் கடல் பரவி
Tune - திருக்குறுந்தொகை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.010
திருநாவுக்கரசர்
தேவாரம்
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
Tune - திருக்குறுந்தொகை
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
6.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
தூண்டு சுடர் அனைய சோதி
Tune - திருத்தாண்டகம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
7.071
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
யாழைப் பழித் தன்ன மொழி
Tune - காந்தாரம்
(திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400