சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.082   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவான்மியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=HxzGOdDxr18  
விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.


[ 1]


பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர்,
மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து
அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும்,
மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே.


[ 2]


மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,
அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று,
எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல்,
வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.


[ 3]


உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன்
வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.


[ 4]


படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை,
வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை,
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.


[ 5]


Go to top
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்;
பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று
அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல்,
வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.


[ 6]


நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர்,
சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர்,
வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.


[ 7]


ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய்,
பாதி பெண் உருஆய பரமன் என்று
ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.


[ 8]


ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி
நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில்,
வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.


[ 9]


பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்
சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்;
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்,
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவான்மியூர்
2.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரை உலாம் கடலில் பொலி
Tune - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
3.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரை ஆர் கொன்றையினாய்! விடம்
Tune - கௌசிகம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
5.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ட மா மலர் கொண்டு
Tune - திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song