சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
7.021
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) - நட்டராகம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு திருமேற்றளியீசுவரர் திருவடிகள் போற்றி
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
[ 1]
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்;
சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும்
மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
[ 2]
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும்,
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே!
சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும்
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
[ 3]
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்;
எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்;
செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும்
பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே .
[ 4]
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்;
மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே!
கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும்
பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .
[ 5]
Go to top
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே
ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே!
தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும்
கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .
[ 6]
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே,
எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்!
செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும்
ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[ 7]
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால்,
உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்;
திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும்
அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[ 8]
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே;
தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்;
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
[ 9]
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச்
சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை
ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
4.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அது பாடிப் பிச்சைக்கு
Tune - திருநேரிசை:கொல்லி
(திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
7.021
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
Tune - நட்டராகம்
(திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400