சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.021   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) - நட்டராகம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு திருமேற்றளியீசுவரர் திருவடிகள் போற்றி
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .


[ 1]


ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்;
சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும்
மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .


[ 2]


மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும்,
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே!
சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும்
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .


[ 3]


உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்;
எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்;
செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும்
பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே .


[ 4]


எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்;
மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே!
கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும்
பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .


[ 5]


Go to top
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே
ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே!
தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும்
கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .


[ 6]


கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே,
எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்!
செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும்
ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .


[ 7]


விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால்,
உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்;
திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும்
அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .


[ 8]


நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே;
தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்;
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .


[ 9]


பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச்
சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை
ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அது பாடிப் பிச்சைக்கு
Tune - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
7.021   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
Tune - நட்டராகம்   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song