சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Ganesha Bhajans     

Shivan Bhajans     

Murugan Bhajans     

Amman Bhajans     

Krishna Bhajans     

Karuppar Bhajans     

முருகன்   - ஆறுமுக சுவாமி விருத்தம்  
ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அரோகரா
அலங்கார ஆபரண மணிந்த மார்பும்
திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும்
ஜெகமெலாம் புகழ்படைத்தாய் சுப்பிரமண்யா
முருகாசர வணபவனே கார்த்தி கேயா
முக்கணனார் புத்திரனே உக்ர வேலா
இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா
இதுசமயம் அடியாரை ரட்சிப் பாயே.1

மயிலேறி விளையாடும் சுப்பிரமண்யா
வடிவேலா உன்பாதம் நம்பி னேனே
உயிரிழந்து அபகீர்த்தி யாகும் வேளை
உன்செயலால் இதுசமயம் உயிரைக் காத்தாய்
தயவாக இனிமேலும் உயிரைக் காத்து
சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்
வைபோக மானமலை பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.2

வருந்துமடியார் உயிரைக் காக்கும் தெய்வம்
வையகத்தில் வேறொரு வரில்லை யென்று
அறிந்துநான் உனைப் பணிந்தேன் சுப்பிர மண்யா
ஆதரித்து பிராணபயம் தீருமையா
திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்
சிறையிலிருந்து தளைப்பூண்டு சின்னமானேன்
பறந்துவரும் மயிலேறும் பழநி வேலா
பண்பாக உயிர்காத்து ரட்சிப் பாயே.3

பெருவேங்கை புலிபிடித்த பசுவைப் போல
பிதுர் கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே
இருவருமே உனைக்கூவச் செவி கேளாதோ
இதுசமயம் தாமதமா யிருக்க லாமோ
குருவாகித் தந்தை தாய் நீயேயாகில்
குமரேசா பிராணபயந் தீரு மையா
முருகேசா இதுசமயம் பழநி வேலா
முன்வந்து உயிர்காத்து ரட்சிப் பாயே.4

பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை போல
பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்
தேம்பியே புலம்புகிறோம் துயர மாகி
தென்னவனே உன்செவிக்கு கேளா தோதான்
நான்புவியில் உனைநம்பி மகிழ்ந் திருந்தேன்
நாயேனுக்கு அபாயம் வரநியாய மோதான்
சாம்பசிவன் புத்திரனே பழநி வேலா
சமயமிது உயிர்காத்து ரட்சிப் பாயே.5

வலையிலகப்பட்ட உயிரது போல் மயங்கு கிறோமே
வடிவேலா இதுசமயம் துயரம் தீர்ப்பாய்
கொலைகளவு பாதகங்கள் பொய்யிருந்த தெல்லாம்
கொடும்பழிகள் வஞ்சனை பில்லி சூனியமெல்லாம்
தொலையாத சிறுபிணிநோய் வல்வினை களெல்லாம்
துறந்து மையா மயிலேறும் சுப்பிரமணியா
மலையிலுறை வாசனே பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே.6

நாகமது கெருடனைக்கண்டலைந்தாற் போல
நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே
தாகமது தீருமையா தவிக்கும் வேளை
சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு
மேகமது பயிர்க்குதவி செய்தார் போல
வேலவனே பிராணபயந் தீருமையா
வேகமுடன் வரவேணும் பழநி வேலா
வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே.7

பூனைகையில் சிக்கியதோர் கிளியைப் போல
புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி
நானடிமை உனைநம்பி யிருக்கும் வேளை
நாயகனே பாராமுகமாய் இருக்க லாமோ
மானீன்ற வள்ளியம்மை தெய்வயானை
மணவாளா சரவணனே கருணை செய்வாய்
கானமயில் வாகனனே பழநி வேலா
கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே.8

தூண்டிலகப்பட்ட உயிரது போல் துடிக்கிறேனே
சுப்பிரமணியா இதுசமயம் அடியேனுக்கு
வேண்டும்வரம் கொடுப்பதற்குப் பார்த்து நீயே
வேறொரு வரில்லையென்று நம்பினேனே
மீண்டுவரும் வினைதீர்த்து துயரம் தீர்ப்பாய்
வேலவனே சூரசங்கார வேலா
ஆண்டவனே உனைப்பணிந்தோம் பழநி வேலா
அடியார்கள் உயிர்காத்து ரட்சிப் பாயே.9

நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாப்போல்
நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள்
தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தணிகை வாசா
சற்குருவே பிராணபயந் தீரு மையா
பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையை வாங்கி
பரிகரித்து உன்னிருதாள் பதமே தந்து
வஞ்சனைகள் செய்யாமல் பழநி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே10

அத்திமுகனே முக்கண்ணனுக்கு இளைய வேலா
அறுமுகனே தணிகையிலே அமர்ந்த வாசா
வித்திறத்திற் பேசாத மூடன் நானும்
வேலவனே நின்னருளால் கவியைப் போல
பத்துமே பதிகமாய்ப் பாடிச் சொன்னேன்
என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தே யாள்வாய்
சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யா
சண்முகனே அடியாரை ரட்சிப் பாயே.11
Add Audio/Video Link
Other முருகன் songs

336 - அரஹரோஹரா சுவாமி (முருகன் )

31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )

61 - அழகான பழனிமலை (முருகன் )

44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )

332 - அழகு அழகு அழகு முருகன் அழகு (முருகன் )

340 - அழகு தெய்வமாக வந்து (முருகன் )

343 - அழகென்ற சொல்லுக்கு முருகா (முருகன் )

2 - அவனாசிப் பத்து (முருகன் )

39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )

24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )

4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )

1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )

32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )

42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )

346 - எட்டுக்குடி நொண்டிச்சிந்து சீர்மேவும் எட்டிக்குடி வாழும் (முருகன் )

37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )

23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )

5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )

6 - ஒயிலாட்டம் (முருகன் )

33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )

58 - காவடிப்பாட்டு (முருகன் )

45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )

30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )

331 - சரணம் முருகையா (முருகன் )

59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )

341 - சீர்வளர் பசுந்தோகை மயிலான் (முருகன் )

43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )

7 - சுப்ரமண்யம் சுப்ரமண்யம் (முருகன் )

339 - சென்னிக்குள நகர் வாசன் (முருகன் )

21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )

72 - ஜெயதி சண்முகம் (ஹரிவராஸனம் மெட்டு) (முருகன் )

34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )

338 - தணிகைமலை பெருந்துறையே (முருகன் )

344 - திருச்செந்தூரின் கடலோரத்தில் (முருகன் )

20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )

27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )

56 - நீரய்யா காவேரி (முருகன் )

16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )

38 - பழனிமலை படியேறு (முருகன் )

8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )

345 - மண்ணானாலும் திருச்செந்தூரில் (முருகன் )

10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )

342 - மருதமலை மாமணியே முருகய்யா (முருகன் )

60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )

63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )

348 - முத்தும் பவழமும் மரகத பச்சையும் (முருகன் )

25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )

330 - முருகா முருகா வேல் முருகா (முருகன் )

41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )

52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )

40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )

22 - வேலவா வடி வேலவா (முருகன் )

62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )

3 - வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல் (முருகன் )

337 - வேல்முருகா வேல்முருகா (முருகன் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:47:45 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

bhajan song bhajan id 1 lang tamil