சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
திருப்பல்லாண்டு  

Songs from 1.0 to 12.0   ( திருவில்லிபுத்தூர் )
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.



[1.0]

நாதமுனிகள் அருளிச் செய்தது 
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் 
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் 
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி




[1.1]

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் 
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள் 
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும் 
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து 




[1.2]

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று 
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய 
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் 
பாதங்கள்யாமுடையபற்று. 




[1.3]
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
      ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
      மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
      ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
      சன்னியமும் பல்லாண்டே



[2.0]
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
      மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
      குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
      இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே



[3.0]
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
      எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
      வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
      நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
      பல்லாண்டு கூறுமினே



[4.0]
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
      அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
      இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
      ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
      லாயிரத்தாண்டு என்மினே



[5.0]
Back to Top
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
      ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
      வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
      அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
      தாண்டு என்று பாடுதுமே



[6.0]
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
      திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
      குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
      தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே



[7.0]
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
      அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
      காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
      வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
      பல்லாண்டு கூறுவனே



[8.0]
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே



[9.0]
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
      யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
      வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
      சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
      பல்லாண்டு கூறுதுமே



[10.0]
Back to Top
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
      கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
      உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
      நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
      பல்லாண்டு கூறுவனே



[11.0]
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
      மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
      சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
      நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
      ஏத்துவர் பல்லாண்டே



[12.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்      
   

send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:34:57 +0000