சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருஅன்பில் ஆலந்துறை
1.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கணை நீடு எரி, மால்,
பண் - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=H3fxoFq9P1A
5.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானம் சேர் மதி சூடிய
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w9O2L8OtDVo

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.033   கணை நீடு எரி, மால்,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

[1]
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

[2]
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[3]
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[4]
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

[5]
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

[6]
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.

[7]
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.

[8]
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,
பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.

[9]
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.

[10]
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.080   வானம் சேர் மதி சூடிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை;
ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக்
கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!

[1]
காரணத்தர், கருத்தர், கபாலியார்,
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
ஆரணப்பொருள், அன்பில் ஆலந்துறை,
நாரணற்கு அரியான் ஒரு நம்பியே.

[2]
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்,
அன்பிலானை, அம்மானை, அள் ஊறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே.

[3]
சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை-
பங்கனார் அடி பாவியேன், நான் உய;
அங்கணன், எந்தை, அன்பில் ஆலந்துறைச்
செங்கணார், அடிச் சேரவும் வல்லனே?

[4]
கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர்,
மிக்க(அ) அரக்கர் புரம் எரிசெய்தவர்,
அக்கு அரையினர், அன்பில் ஆலந்துறை
நக்க உரு(வ்) வரும், நம்மை அறிவரே.

[5]
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்;
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே.

[6]
பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும்,
உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே,
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே!

[7]
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா
அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!

[8]
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்-
கையன்மார் உரை கேளாது எழுமினோ!
ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.

[9]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று
மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன்,
அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000