சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
திருவிசைப்பா

Back to Top
வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
9.021   வேணாட்டடிகள் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=5jdnKon4PlU
Audio: https://www.youtube.com/watch?v=9JFKojIrJTI
Audio: https://www.youtube.com/watch?v=iAsUU0dNmS4

9.021 வேணாட்டடிகள் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
துச்சான செய்திடினும்
   பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி
   இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை
   நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே!
[1]
தம்பானை சாய்ப்பற்றார்
   என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்(கு) இல்லாமை
   என்னளவே அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி
   வழியடியேன் தொழிலிறையும்
நம்பாய்காண் திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே !
[2]
பொசியாதோ கீழ்க்கொம்பு
   நிறைகுளம்என் றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச்
   சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும்
   எனையுடையாள் உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே !
[3]
ஆயாத சமயங்கள்
   அவரவர்கள் முன்பென்னை
நோயோடு பிணிநலிய
   இருக்கின்ற அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம்
   பிரான்இகழும் என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே.
[4]
நின்றுநினைந்(து) இருந்துகிடந்து
   எழுந்துதொழும் தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா(து)
   இருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல்
   கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே.
[5]
படுமதமும் மிடவயிறும்
   உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும்
   அகத்தியனுக்(கு) ஓத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்(கு)
   ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே.
[6]
மண்ணோடு விண்ணளவும்
   மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா(து)
   ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந்(து)
   அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே.
[7]
வாடாவாய் நாப்பிதற்றி
   உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாஞ்செய் குற்றேவல்
   எற்றேமற் றிதுபொய்யில்
கூடாமே கைவந்து
   குறுகுமா(று) யான்உன்னை
நாடாயால் திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே.
[8]
வாளாமால் அயன்வீழ்ந்து
   காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத்
   துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும்
   அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை
   நடம்பயிலும் நம்பானே.
[9]
பாவார்ந்த தமிழ்மாலை
   பத்தரடித் தொண்டனெடுத்(து)
ஓவாதே அழைக்கின்றான்
   என்றருளின் நன்றுமிகத்
தேவேதென் திருத்தில்லைக்
   கூத்தாடீ நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல்
   இனியுனக்குத் தடுப்பரிதே.
   
[10]

This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool author %E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D book name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+ lang tamil