காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,- தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்; வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்; பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின் மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான் தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்; கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்; பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்; கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.
கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை நல் உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச் சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும் செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே.
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D pathigam no 1.117